இறைவரித் திணைக்களத்துக்கு வருவாயை விட அதிகமாக வருமானம்!

Date:

முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், தமது வரி வருமான இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊராபொல பிரதேசத்தில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலக்கு வருவாயை விட 105% அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு தேசிய நாளிதழில் முதல் காலாண்டில் எதிர்பார்த்த வருவாயில் 19% மட்டுமே ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று அமைச்சர் கூறினார்.

மேலும், முதல் காலாண்டில் சுங்கத்துறை எதிர்பார்த்த வருவாயில் 89% ஈட்டியுள்ளதாகவும், மதுவரி திணைக்களம் 64% வருமானம் ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...