இலங்கையில் இந்து, முஸ்லிம் மக்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளது!

Date:

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த சுயாதீன ஆணைக்குழு, இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா, நைஜீரியா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளிலும் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில மதத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தை மதச் சுதந்திர கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அந்த ஆணைக்குழு நான்காவது ஆண்டாக பரிந்துரைத்துள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...