சூடானில் துருக்கி தூதுவரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது!

Date:

துருக்கி  தூதுவரின் வாகனம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு பிறகு, சூடானின் தலைநகரான கார்ட்டூமில் உள்ள தனது தூதரகத்தை போர்ட் சூடானுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர்  Mevlut Cavusoglu சனிக்கிழமை அறிவித்தார்.

“எங்கள் தூதரகம் மற்றும் எங்கள் சக ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, நாங்கள் எங்கள் தூதரகத்தை போர்ட் சூடானுக்கு மாற்ற முடிவு செய்தோம், என வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கி தூதுவர் இஸ்மாயில் கோபனோக்லு சூடான் இராணுவம் மற்றும் துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) ஆகிய இருவருடனும் இந்த பிரச்சினையை விவாதித்து, இடமாற்றத் திட்டங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவித்ததாக துருக்கி  அமைச்சர் மேலும் கூறினார்.

சனிக்கிழமையன்று சூடானுக்கான துருக்கி தூதுவரின் உத்தியோகபூர்வ வாகனம் துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது, அதே நேரத்தில் வாகனம் சேதமடைந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தாக்குதல் நடந்த பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறிய RSF, நாட்டில் உள்ள தூதரகப் பணிகளைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...