Update:- களுத்துறை யுவதியின் மர்ம மரணம்: பிரதான சந்தேக நபர் கைது!

Date:

களுத்துறையில் 16 வயதுடைய திஹார நிர்மானி நிஸ்ஸங்க சில்வா என்ற யுவதியின் மரணம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, இசுரு உயனே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் காலி பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் பிரிவு பொலிஸ் குழு இன்று காலை காலி பிரதேசத்தை சுற்றிவளைத்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபரை களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிக்டொக் ஊடாக சுமார் 2 மாதங்களாக யுவதியுடன் காதல் வசப்பட்டிருந்த நபர், கடந்த 6ஆம் திகதி யுவதியை விடுதிக்கு அழைத்து சென்றார். பின்னர் ஹொட்டலின் 3வது மாடியிலிருந்து கீழே நிர்வாணமாக விழுந்த யுவதி சடலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...