அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி: பராளுமன்றில் மௌன அஞ்சலி

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதையிட்டு இன்று பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதற்கு இணக்கம் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஒரு நிமிடம் இந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 2022 மே 09 ஆம் திகதி மாலை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் நிட்டம்புவவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை சுற்றிவளைத்த குழுவொன்று, அவரை வாகனத்திலிருந்து இறக்கி துரத்திச்சென்று சுட்டுக்கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...