கொழும்பு ஸாஹிராவில் நடைபெற்ற ‘RPSL Consortium’ அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்!

Date:

முஸ்லிம்களுடைய தேசிய, சமூக விவகாரங்களில் இந்நாட்டிலுள்ள புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள் சமூகவியலாளர்கள் கலந்துகொண்டு சமூக மேம்பாட்டுக்காக பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07)  RPSL Consortium அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் மருதானை ஷாகிரா கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் வக்பு சபையின் தலைவரும் சட்டத்தரணி சப்ரி ஹலிம்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான அமைச்சர் அலி சப்ரி பிரதான உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் இரண்டாவது அமர்வு வசீம் முக்தார் தலைமையில் ‘முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றது.

கருத்தரங்கின் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ரவூப் ஹக்கீம் முன்னாள் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், பைசர் முஸ்தபா,கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் உமர் காமில், தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி சலீம் மர்சூக்,கலந்துகொண்டதுடன்  ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி அகார் முஹம்மத் சிறப்பு மார்க்க சொற்பொழிவையாற்றினார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...