14 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு இல்லை: காமினி வலேபொட

Date:

இலங்கையில் பாடசாலை மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது, 14 இலட்சத்துக்கும் அண்மித்த எண்ணிக்கையிலான மாணவர்கள் போதியளவில் காலை உணவை உண்பதில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவருமான காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.

காலை உணவைத் தவிர்ப்பது குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சோதனைகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐந்தில் ஒரு பங்கு சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையே சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் எனவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இறப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இன்று பிள்ளைகளுக்கு உணவளிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு பாரியதாகிவிட்டதாகக் கூறும் காமினி வலேபொட, பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக குழந்தைகளுக்கு முன்பைப் போன்று சத்தான புலால் உணவையும் மரக்கறி உணவையும் வழங்குவதற்கு பெற்றோரால் முடியவில்லை.

இதன் காரணமாக, எதிர்வரும் காலங்களில் குழந்தைகளிடையே போஷாக்கு குறைபாடுகள் அதிகரிக்கலாம் என சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...