ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்த சவூதி அரேபிய அறுவை சிகிச்சை நிபுணர் குழு

Date:

சவூதி அரேபியாவின்  விசேட அறுவை சிகிச்சைக் குழு, 14 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நைஜீரியாவைச் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஹசானா மற்றும் ஹசீனாவைப் பிரித்துள்ளது.
36 பேர் கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர்கள் குழு, பல்துறை மருத்துவக் குழுவைச் சேர்ந்த 85 பேர் கொண்டு இந்த அறுவை சிகிச்சை எட்டு கட்டங்களாக  நடத்தப்பட்டது.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் உத்தரவின் பேரில் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் அப்துல்லா அல்-ரபீஹ், வழிகாட்டுதலின் கீழ் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சவூதி அரேபியாவின் மனிதாபிமான முயற்சிகள் 33 ஆண்டுகளில் 23 நாடுகளில் இருந்து 130 ஒட்டிப்பிறந்த இரட்டையர்களுக்கு உதவியுள்ளன, இதன் விளைவாக ஹசானாவும் ஹசினாவும் பிரிக்கப்பட்ட 56 வது இரட்டையர்களாவர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...