புத்தளத்தைச் சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்.எச்.அப்துன் நாசர் ரஹ்மானி சர்வதேச அரபு மொழிக் கவிதை நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்!

Date:

அரபு அல்லாத நாடுகளில் அரபுக் கவிதையின் நிலவரம் பற்றிய ஆய்வரங்கொன்று அண்மையில் சவூதி அரேபிய  மதீனா நகரில் இடம்பெற்றது.

அரசு மொழி பேசாத நாடுகளின் அரபு மொழியில் கவிதை படிக்கின்ற திறமைப் பெற்ற கவிஞர்களுக்கான இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துன் நாசர் ரஹ்மானி என்பவர் கலந்துகொண்டு பரிசில்களும் விருதையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை இந்நிகழ்வில் உலக நாடுகளிலிருந்து பல அரபுக் கவிஞர்கள் கருத்தாளர்களாக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

புத்தளத்திலிருந்து கருத்தாளராக அழைக்கப்படிருந்த அப்துன் நாசர் ரஹ்மானி ஹஸ்ரத் அவர்களுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.

அரபு மொழி பேசாதா ஒரு நாடு என்ற வகையில் இலங்கையைச் சேர்ந்த அறிஞர்  இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தமை முஸ்லிம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தரும் விடயமாகும்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானிலிருந்து மேலும் ஒருதொகை நிவாரணம் இலங்கைக்கு கையளிப்பு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான...

தஃவா அமைப்புக்களை பரஸ்பரம் புரிந்துகொள்ள வைப்பதில் பங்காற்றிவரும் அனர்த்த நிவாரணப்பணிகள்

அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா...

அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து ஜனாதிபதி அனுர இரங்கல்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16...

ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சயீத் காசாவில் படுகொலை!

காசாவில் ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...