ஈரானுக்கு எதிராக 50 ஆண்டுகள் பொருளாதார தடை விதித்த உக்ரைன்!

Date:

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு குறைந்த விலையில் ஆயுதம் விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகின்றது.

இதனால் ஈரான் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை உக்ரைன் அரசாங்கம் விதித்துள்ளது.

இந்தநிலையில் ஈரானுக்கு எதிராக உக்ரைன் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி புதிய சட்டமூலத்தை தாக்கல் செய்து தெரிவித்தார்.

அப்போது இந்த சட்டமூலம் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஈரான் மீது விரிவான துறைசார் பொருளாதார தடைகளை விதிக்க வழிவகை செய்து வருவதாக அவர் கூறினார்.

மேலும் உக்ரைன் வழியாக அதன் வளங்களை கடத்துதல், தொழில் நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மாற்றுவதற்கு தடை விதிக்க இந்த சட்டமூலம் வழிவகை செய்வதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் ரஷ்யா மற்றும் ஈரானில் உள்ள 141 சட்ட நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உக்ரைன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...