கோழி இறைச்சி, மீன், தேங்காய் விலை அதிகரிப்பு

Date:

கோழி இறைச்சி, மீன் மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஆயிரம் முதல் 1,200 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோவொன்று 1, 500 ரூபா முதல் 1,600 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் சந்தையில் மீனின் விலையும் மீண்டும் ஒரு முறை அதிகரித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில், கெலவல்லா கிலோவொன்று 1,900 ரூபாவுக்கும், பலயா மீன் கிலோவொன்று 1,400 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த விலை உயர்விற்கு இணையாக சாதாரண சந்தைகளிலும் மீனின் விலை உயர்ந்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர் சங்க தலைவர் அசேல சம்பத், கோழி இறைச்சி, மீன், முட்டை மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...