பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைக்க விசேட குழு நியமனம்

Date:

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் மற்றும் பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பது தொடர்பான சட்ட மூலத்தின் முன்னேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட பங்குதாரருடன் இணைந்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.

ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுசுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (01) கூடிய போது ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) பிரதிநிதியால் சட்ட மூலம் தொடர்பில் முன்வைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சட்ட மூலங்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு நிபுணர்கள் குழுவொன்றை அமைக்குமாறு ஒன்றியத்தின் தலைவர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் செயலாளரின் தலைமையில் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பேராசிரியர் வசந்தா செனவிரத்ன, கலாநிதி றோஸ் விஜேசேகர, கலாநிதி ரமணி ஜயசுந்தர, கலாநிதி விஜய ஜயதிலக்க, விசேட வைத்திய நிபுணர் லக்ஷ்மன் சேனாநாயக்க மற்றும் உதேனி தெவரப்பெரும ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...