வரி திருத்தத்திற்கு எதிராக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும்!

Date:

அண்மைய வரி திருத்தத்திற்கு எதிராக மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA ) எச்சரித்துள்ளது.

தொழில் வல்லுனர்களுக்கு சுமையாக உள்ள அண்மைய வரி அதிகரிப்பை திருத்தும் திட்டத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஒரு தீர்மானத்திற்கு வந்து அதன் திட்டத்தை வாரத்திற்குள் அறிவிக்கத் தவறினால், ஏனைய நிபுணர்களின் ஆதரவுடன் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

GMOA மற்றும் தொழில் வல்லுநர்கள் எவ்வாறு திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்கு தங்கள் முன்மொழிவுகளை வழங்கியுள்ளனர்.

வரி தொடர்பான தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...