ஹஜ் யாத்திரிகர்களுக்கான சிறப்பு ரயில் சேவையை இயக்கியது சவூதி

Date:

சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் சேவைகளை இயக்கியுள்ளது.

மினா, அராஃபத் மற்றும் முஸ்தலிஃபா இடையே யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் அல் மஷாயர் மெட்ரோ லைன், தற்போதைய ஹஜ் பருவத்திற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்களை ஏற்றிச் செல்ல தயாராக உள்ளது.

இந்த மெட்ரோ  ரயில் 18 கிலோமீட்டர் பயணிப்பதுடன் இந்த ரயில் பாதையில் ஒன்பது ரயில்  நிலையங்கள் உள்ளன, இதில் மினா, அராபத் மற்றும் முஸ்தலிஃபாவில் தலா மூன்று உள்ளன.

இந்த பாதையின் கடைசி நிலையம் ஜமாரத் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஒரு மெட்ரோ ரயில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது மற்றும் மினாவில் இருந்து அராஃபத்திற்கு பயணிக்க 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

அல் மஷாயர் மெட்ரோ லைனில் 17 ரயில்கள் உள்ளன, அவை புனித தலங்களுக்கு சேவை செய்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஒரு ரயிலில் 3,000 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

இதன்மூலம் புனிதத் தலங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கலாம். சாலைகளில் நெரிசல் குறையும். மேலும், யாத்திரிகர்களும் தாங்கள் போக வேண்டிய புனிதத் தலத்திற்கு விரைவாக போக முடியும்.

அல் மஷார் மெட்ரோ ரயில் கடந்த 15 ஆண்டுகளில் யாத்திரிகர்களுக்கு சேவை செய்வதற்காக சவூதி அரேபியாவால் செயல்படுத்தப்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்றாகும்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...