போர் காலத்தில் கூட ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் கூடியதில்லை-ஹரினி அமரசூரிய

Date:

நாட்டில் போர் நடைபெற்ற காலத்தில் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

போர் காலத்தில் கூட வார இறுதி நாட்களில் கூட நாடாளுமன்றத்தை அவசரமாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டியுள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாது, ஒரு நபரின் தேவைக்கு அமைந்து இது நடக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது.

அவசரமாக வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் எப்போதும் ஞாயிற்றுக் கிழமைகளில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதில்லை.

வரவு செலவுத்திட்டம் விவாதங்களில் போது, மிக அரிதாக சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடும். பிரித்தானிய நாடாளுமன்றம் கூட ஞாயிற்றுக் கிழமைகளில் கூடியதில்லை.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தி மக்களின் வறுமையை அதிகரித்து வருகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்கு பாதுகாப்பை வழங்கிய சமூக நிவாரணங்களையும் அரசாங்கம் படிப்படியாக இல்லாமல் ஆக்கி வருகிறது எனவும் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான்...