மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு !

Date:

கனமழையால் காய்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான மரக்கறிகளின் விலை கிலோ 300 ரூபாவை தாண்டியுள்ளது.

கேக்கிரி, வெள்ளரி, வாழைக்காய், பலாக்காய், நோக்கல், முள்ளங்கி ஆகியவை மட்டுமே  100 ரூபாவுக்கு  குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அத்தோடு மலையகத்தில் இருந்து கொண்டுவரப்படும்  மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனால் வாழைக்காய், பலாக்காய்  போன்ற மரக்கறிகளை பொதுமக்கள் அதிகம் கொள்வனவு செய்வதாக  மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மலையகத்தில் சீரற்ற வானிலை தொடர்வதால்  சந்தைக்கு கொண்டுவரப்படும்  காய்கறிகளின் அளவும்  வெகுவாக  குறைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...