ஈஸ்டர் தாக்குதல் தீர்ப்பின் படி 100 மில்லியன் அபராதத்தில் 15 மில்லியனை செலுத்தினார் மைத்திரி

Date:

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமைக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார்.

100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், இந்த தொகை (15 மில்லியன் ரூபா) நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ஓய்வூதியமாக 97,500/- ரூபாவையும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொடுப்பனவுகள் நீங்கலாக 54,285 ரூபாவையும் வருமானமாகப் பெறுவதாக மைத்திரிபால தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாவில், தலா 10 மில்லியன் ரூபா மற்றும் 5 மில்லியன் ரூபா வீதம், 15 மில்லியன் ரூபா ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், எஞ்சிய 85 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை அடுத்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் 10 தவணைகளாக வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறும் முன்னாள் ஜனாதிபதி கோரியுள்ளார்.

Popular

More like this
Related

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...