புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரீ ரஹீமின் நாடாளுமன்ற உறுப்புரிமை குறித்து இன்றைய தினம் (14) தீர்மானிக்கப்பட உள்ளது.
சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்கள் மற்றும் தொலைபேசிகள் என்பனவற்றை நாட்டுக்குள் கொண்டு வந்தமை தொடர்பில் அலி சப்ரீ ரஹீம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்புரிமையில் ரஹீம் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது பற்றி இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.