விவாக, விவா­க­ரத்து சட்­டத்திருத்­தம் ஹலீம்தீன் தலைமையிலான குழுவுடன் ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும்!

Date:

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான சட்ட மூலத்­துக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு கைய­ளித்­துள்ள அறிக்கை சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அக்­கு­ழு­வினை கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பே இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாச ராஜ­பக்ஷ கொழும்பிலிருந்து வெளியாகும் வாராந்தப் பத்திரிகையொன்றுக்குத் தெரி­வித்தார்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­ சப்­ரி­யினால் குறிப்­பிட்ட சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டதே சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வாகும்.

சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­ட­னான பேச்­சு­வார்த்தை ஓரிரு தினங்­களில் இடம்­பெ­று­மெ­னவும் நீதி­ய­மைச்சர் தெரி­வித்தார்.

இதே­வேளை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு நீதி­ய­மைச்­ச­ருக்கு கைய­ளித்த குறிப்­பிட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்­பி­லான அறிக்கை தனக்குக் கிடைத்­துள்­ள­தாக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழுவில் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் ஹக்கீம் அபூ­பக்கர், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித், சட்டத்தரணிகள் சபானா குல்பேகம், எர்மிசா டேகல் மற்றும் ஷேக் முயீஸ் புஹாரி, நாமிக் நபாத் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...