விவாக, விவா­க­ரத்து சட்­டத்திருத்­தம் ஹலீம்தீன் தலைமையிலான குழுவுடன் ஆராய்ந்த பின்னரே முடிவு செய்யப்படும்!

Date:

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பான சட்ட மூலத்­துக்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு கைய­ளித்­துள்ள அறிக்கை சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அக்­கு­ழு­வினை கலந்­து­ரை­யா­டி­யதன் பின்பே இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் நீதி­ய­மைச்சர் விஜே­ய­தாச ராஜ­பக்ஷ கொழும்பிலிருந்து வெளியாகும் வாராந்தப் பத்திரிகையொன்றுக்குத் தெரி­வித்தார்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­ சப்­ரி­யினால் குறிப்­பிட்ட சட்­டத்­தி­ருத்­தங்கள் தொடர்பில் ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டதே சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வாகும்.

சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­ட­னான பேச்­சு­வார்த்தை ஓரிரு தினங்­களில் இடம்­பெ­று­மெ­னவும் நீதி­ய­மைச்சர் தெரி­வித்தார்.

இதே­வேளை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையொப்­ப­மிட்டு நீதி­ய­மைச்­ச­ருக்கு கைய­ளித்த குறிப்­பிட்ட முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் தொடர்­பி­லான அறிக்கை தனக்குக் கிடைத்­துள்­ள­தாக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழுவில் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் ஹக்கீம் அபூ­பக்கர், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அர்கம் நூராமித், சட்டத்தரணிகள் சபானா குல்பேகம், எர்மிசா டேகல் மற்றும் ஷேக் முயீஸ் புஹாரி, நாமிக் நபாத் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...