மருந்துகளின் தரப் பரிசோதனையை மேற்கொள்ள சர்வதேச ரீதியிலான ஆய்வகம்!

Date:

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இவ்வாறான ஆய்வுகூடத்தை நிறுவுவதற்கு சுமார் ஒரு பில்லியன் ரூபா செலவாகும் எனவும், அதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) தற்போதுள்ள ஆய்வுக்கூடம் சர்வதேச தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படுமா அல்லது புதிய ஆய்வகம் நிறுவப்படுமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அரசாங்கம் வருடமொன்றுக்கு பில்லியன் கணக்கான ரூபாவைச் செலவழித்தாலும், நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரத்தைப் பரிசோதிப்பதற்கான தரப்படுத்தப்பட்ட ஆய்வுகூடம் இலங்கையில் இல்லை.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) இன் ஒரே ஆய்வகம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது மற்றும் பல செயல்படாத உபகரணங்களுடன் பாழடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறித்த ஆய்வகம் தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பில் (ISO) நிலையான சான்றிதழைப் பெறுவதற்கான ஆவணங்களை ஆய்வகம் சமர்ப்பித்த நிலையில் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.” என தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) ஆய்வகத்தில் கிட்டத்தட்ட 50 வீத இயந்திரங்கள் வேலை செய்யும் நிலையில் இல்லை என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டுகிறார்.

தொடக்கத்தில் இருந்து அதன் திறன் மேம்படுத்தப்படவில்லை என்றும், தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு 60 ஆக இருந்த விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 20 ஆக குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...