உலக கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் விரைவில் வெளியீடு!

Date:

50 ஓவர் உலக கிண்ண தொடரானது இந்தியாவில் வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்காளதேஷ், நடப்பு சம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

உலக கிண்ண தொடர் ஒக்டோபர் 5 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்ப போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்திய அணி தனது தொடக்க போட்டியில் அவுஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.

இந்நிலையில் உலக கிண்ண தொடரில் பங்குபெறும் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலக கிண்ண தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 5 ஆம் திகதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து உலக கிண்ண தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை விரைவாக தேர்ந்தெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...