சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்ட ஐக்கிய மக்கள் சக்தி

Date:

 தரக்குறைவான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்து சுகாதாரத் துறையை நலிவடையச் செய்தமை மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியமை ஆகிய காரணங்களுக்காக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, “மக்கள் வாக்களிப்பில் பாராளுமன்றத்திற்கு வந்த ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுங்கள்.

ஒரு நாட்டின் ஆரோக்கியம் என்பது நாட்டு மக்களின் வாழ்க்கை, சுகாதார சீர்கேடு மக்களின் வாழ்க்கை சீரழிவதற்குக் காரணம்”. என தெரிவித்தார்.

அண்மைய காலங்களில், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து பயன்படுத்தியதால், நாட்டின் சுகாதார அமைப்பில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக அறிவித்த போதும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது அவசர நிலைமை எனக் கருதி கொள்வனவு மற்றும் பதிவு நடவடிக்கைகளுக்கு புறம்பாக மருந்துகள் கொண்டு வரப்பட்டதன் விளைவாக நாட்டில் உள்ள பல முக்கிய வைத்தியசாலைகளில் உயிரிழப்புகள் பதிவாகின.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...