நைகர் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்: ஜனாதிபதி சிறைபிடிப்பு!

Date:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைகரில் திடீரென இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, ஜனாதிபதி முகமது பாசுமை சிறைபிடித்தனர்.

இதனை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஊடாக பாதுகாப்பு தரப்பினர் மக்களுக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆதரவாக தலைநகர் நியாமியில் திரளான மக்கள் வீதிகளில் இறங்கினர்.

ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்த வீரர்கள் எதிர்ப்பை சமாளிக்க துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

ஆனாலும் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது. ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குறித்த இச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...