நாளை இலங்கை வரவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி!

Date:

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

இம்மானுவேல் மக்ரோன் கடந்த 24 ஆம் திகதியன்று பப்புவா நியூ கினியாவிற்கு ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டார்.

இந்நிலையில் அங்கிருந்து நாடு திரும்பும் வேளையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மக்ரோனின் இந்த விஜயமானது பிரான்ஸ் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாகும்.

மக்ரோனின் விஜயமானது, இந்தோ-பசுபிக் மூலோபாயத்தை வலுப்படுத்துவதாகவும், பிராந்தியத்தில் பிரான்சின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...