இம்முறை தேசிய மீலாத் விழாவை மன்னாரில் நடத்த விதுர விக்ரமநாயக்க தீர்மானம்!

Date:

இந்த ஆண்டுக்கான தேசிய மீலாத் விழாவை செப்டெம்பர் 28ஆம் திகதி மன்னார் மாவட்டத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார  அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தீர்மானத்துக்கு அமைய தேசிய மீலாத் விழா கொண்டாட்டங்களுக்கென மன்னார் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இவ் வைபவங்களை நடத்துவதற்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ. எம்.பைசல் தலைமையில் அதிகாரிகள் குழு ஏற்கனவே களப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறும் இந்த வைபவத்தில் சபாநாயகர், அமைச்சர்கள், தூதுவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளும் பங்கேற்க உள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...