மாகாண மட்டத்தில் ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை: கல்வி அமைச்சர்

Date:

புதிய பட்டதாரிகளை மாகாண மட்டத்தில் ஆசிரியர்களாக உள்வாங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உறுதியளித்துள்ளார்.

களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் , விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப பிரிவுகளுக்கும் ஆங்கிலம் மற்றும் ஏனைய வெளிநாட்டு மொழிகளுக்கும் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், மொத்தம் 7,342 புதிய ஆசிரியர் நியமனங்கள் அரசால் வழங்கப்பட்டன.

எவ்வாறாயினும், நீதிமன்ற நடவடிக்கை காரணமாக, பல பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை பூர்த்தி செய்ய முடியாது எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...