நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், நீரின் தேவை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதிலும், வரையறுக்கப்பட்ட நீரை நிர்வகிக்க வேண்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர் மின் உற்பத்திக்கு நீரை திறந்து விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பயிர்களைப் பாதுகாக்க நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதிய மழை பெய்யாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இலங்கையில் போதிய மழையைப் பெறவில்லை.

ஆண்டுதோறும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பதிவாகும்.

மேலும், வறட்சி காரணமாக உடவலவ நீர்த்தேக்கம் உட்பட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...