பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய விசேட குழு!

Date:

திருகோணமலை சீன குடா பகுதியில் பயிற்சி விமானம் விபத்திற்குள்ளானமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானமொன்று சீனன்குடாவில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை விமானப்படைத் தளத்தின் சீனக்குடா முகாம் அமைந்துள்ள பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை விமான படையின் சீனக்குடா பொறியியல் பீடத்தில் இலக்கம் 1 பயிற்சித்தளத்தில் விமானிகளை பயிற்சியளிக்க பயன்படுத்தப்பட்ட PT 6 வகைகயைச் சேர்ந்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமான சோதனைக் கடமைகளுக்காக பயணித்த விமானி மற்றும் பொறியியலாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்று காலை 11.25 இக்கு புறப்பட்ட குறித்த விமானம், 11.27 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...