சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான அவ நம்பிக்கை பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விவாதிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதற்கான திகதியினை சபாநாயகரே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை இந்த வாரத்தில் விவாதிப்பதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பெருந்தோட்டத்துறை தொடர்பான விவாதம் இந்தவாரம் இடம்பெறவுள்ளதால் இதற்கே பிரதான முக்கியத்துவத்தை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு மற்றும் சர்ச்சைக்குரிய மயக்க மருந்து உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக அவ நம்பிக்கை பிரேரணையை முன்வைத்துள்ளது.
இதேவேளை பெருந்தோட்ட மக்கள் தொடர்பான அவர்களது அரசியல், பொருளாதார, சமூக, பின்னடைவுகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.