இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

Date:

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வார இறுதியில் இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ‘த ஹிந்து’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

‘Shi Yan 6’ எனும் சீன கடல்சார் ஆய்வு கப்பலுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் அமைவதாக ‘த ஹிந்து’ தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் இந்திய பாதுகாப்பு அமைச்சர், திருகோணமலையில் அமைக்கப்படும் எண்ணெய் தாங்கிகளின் மேம்பாட்டு பணிகளை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் கைச்சாத்திடப்பட்டது. சீன ஆய்வு கப்பலான Shi Yan 6 இலங்கை வருவதற்கு முன்னதாகவே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...