பிச்சை எடுக்கும் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படும் சிறுவர்கள்!

Date:

பிச்சை எடுக்கும் வியாபாரத்திற்கு பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தப்படுவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் தொடர்பான அமைச்சு ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போது அவர் தெரிவித்தார்.

அதன்படி, பொலிஸ், உள்ளூர் அமைப்புகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து பூர்வாங்க கலந்துரையாடலை நடத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

குழந்தைகளை பிச்சை எடுக்க கூலிக்கு அமர்த்துவது, சில குழந்தைகளை போதை மருந்து கொடுத்து பிச்சை எடுக்க வைப்பது, பெண்கள் கர்ப்பமாக இருப்பது போல் பிச்சை எடுக்க வைப்பது ஒரு தொழிலாக மாறிவிட்டது என இங்கு விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பில் நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இருந்தாலும், நடைமுறை மட்டத்தில் உரிய முறையில் அமுல்படுத்தப்படுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...