கிரிக்கெட் ரசிகர்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பங்களாதேஷ் அணியுடனான போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளைக் காண 1,000 ரூபாவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறும்.

கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் Lower Block C மற்றும் D பிரிவில் செப்டம்பர் 9, 12, 14, 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை விளையாட்டு ரசிகர்கள் ரூ.1,000க்கு வாங்க முடியும்.

இதனிடையே இன்றைய போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டால் நாளை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நிலையில் இன்றைய போட்டிக்கு வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் நாளை செல்லுபடியாகும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...