கிரிக்கெட் ரசிகர்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

இலங்கை அணி பங்கேற்கும் ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றின் முதலாவது போட்டி இன்று கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பங்களாதேஷ் அணியுடனான போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றுக்கான டிக்கெட் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள சுப்பர் 4 சுற்றுப் போட்டிகளைக் காண 1,000 ரூபாவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கப்பெறும்.

கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் Lower Block C மற்றும் D பிரிவில் செப்டம்பர் 9, 12, 14, 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை விளையாட்டு ரசிகர்கள் ரூ.1,000க்கு வாங்க முடியும்.

இதனிடையே இன்றைய போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டால் நாளை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நிலையில் இன்றைய போட்டிக்கு வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் நாளை செல்லுபடியாகும்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...