அதானிக்கு பிரியாவிடை கொடுத்த உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட!

Date:

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இம்மாத இறுதியில் தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளார்.

இதன் காரணமாக அவர் இந்தியாவில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பிரியாவிடை கொடுத்துவருகிறார்.

இந்நிலையில் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி, உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் பிரியாவிடை விருந்து அளித்துள்ளார்.

உயர்ஸ்தானிகர் மொரகொட, தம்முடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்காக அதானிக்கு நன்றி தெரிவித்தார்.

டெல்லியில் பதவியில் இருந்த காலத்தில் தமக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

1988 ஆம் ஆண்டில் கௌதம் அதானியால் நிறுவப்பட்ட அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.

அதன் வணிகங்களில் துறைமுக மேலாண்மை, மின்சார உற்பத்தி மற்றும் பரிமாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சுரங்கம், விமான நிலைய செயல்பாடுகள், இயற்கை எரிவாயு, உணவு பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுதல் உள்பட பல்வேறு பணிகளை அதானி குழுமம் முன்னெடுத்துவருகிறது.

 

 

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...