50 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது: இந்தியா நிதானமான துடுப்பாட்டம்

Date:

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இதன்படி, இந்திய அணிக்கு 51 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பம் முதலே பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் அதிகபட்சமாக 17 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் ஐந்து வீரர்கள் ஓட்டங்களை எதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் ஆறு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

51 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

2.4 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், இன்னும் வெற்றிபெற இந்திய அணிக்கு 20 ஓட்டங்களே தேவைப்படுகின்றது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...