அவிசாவளை துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு: மேலும் இருவர் படுகாயம்!

Date:

அவிசாவளை – ஹியல தல்துவ பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு 11.15 அளவில் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை – ஹியல தல்துவ பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்படும் சந்தர்ப்பத்தில் முச்சக்கரவண்டியில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இவ்வாறு பயணித்த நால்வரில் இருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த ஒருவரை இலக்கு வைத்து, இதற்கு முன்னரும் துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடாத்திய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சம்பவ இடத்தில் 20திற்கும் மேற்பட்ட T56 ரக துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...