நாட்டின் 70 வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகள் இன்று முடங்கும்!

Date:

நாடு முழுவதிலும் உள்ள 70க்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகளுக்கு முன்பாக மதிய உணவு நேரத்தில் போராட்டமொன்றை நடத்த உள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கம் மற்றும் ஐக்கிய மக்கள் இயக்கம் ஆகியன தெரிவித்துள்ளன.

நாட்டின் சுகாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை காரணமாக ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உயர்தர சுகாதார சேவைகளை உருவாக்க போராட்டத்தின் ஊடாக அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்றும் நாளையும் இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது. “சுகாதார சேவைகள் ஆபத்தில்“ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.

நாட்டு மக்களையும் சுகாதாரக் கட்டமைப்பையும் பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்களை நடத்த நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றும் வைத்தியர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...