ஈஸ்டர் தாக்குதலுக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பில்லை: அனுரகுமார

Date:

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்று ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான எந்த விசாரணை அறிக்கையிலும் கூறப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த இரண்டு பேரின் தந்தையான வர்த்தகர் இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்தமை தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி உரையாற்றிமைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டு புஷ்வானமே அன்றி உண்மையான வெடியல்ல.

இப்ராஹிமுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் சட்டத்தரணியாக அலி சப்றியே முன்னிலையாகி இருந்தார்.

அவருக்கு சட்டத்தரணியாக இருந்தார் என்பதற்காக அலி சப்றிக்கு பயங்கரவாத செயலுடன் தொடர்புள்ளது என கூற முடியாது.

இப்ராஹிம் ஒன்றரை இரண்டு வருடங்கள் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன் போது கூட மக்கள் விடுதலை முன்னணிக்கும் தாக்குதலுக்கு தொடர்புள்ளமைக்கான எவ்வித விடயங்களும் வெளியாகவில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...