சிறுவர்களுக்கு செழிப்பான நாட்டை கட்டியெழுப்ப வேலைத்திட்டம்: ஜனாதிபதி

Date:

சவாலான சகாப்தத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பயணத்தில் தற்போதைய இளம் சந்ததியினரே முன்னோடிகளாக திகழ்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களைக் கொண்டு சவால்களை சமாளிக்கும் சமச்சீர் ஆளுமை கொண்ட திறமையான குடிமக்களாக சிறுவர்களை சமூகமயமாக்கும் வகையில் கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் தாம் போற்றி வந்த பெறுமதிமிக்க நற்பண்புகளை உலகுக்கு பிரதிபலிக்கும் வகையில் உலக முதியோர் தினம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...