இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக இஸ்ரேல் நாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டு தூதரகத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடக பேச்சாளருமான காமினி செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலில் இலங்கையர்கள் தொழில் புரியும் இடங்களில் ஏதேனும் பிரச்சினை இருக்குமானால் அவர்கள் 0094716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு தகவல் வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கென தூதரகத்தில் இரண்டு அதிகாரிகள் முழுநேர கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இஸ்ரேலில் இருக்கும் உங்கள் உறவினர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றால் அது தொடர்பில் 1989 என்ற எமது துரித இலக்கத்துக்கு தகவல் வழங்கினால் தூதரகம் ஊடாக அது தொடர்பான தகவல்களை கேட்டறிந்து அறிவிப்போம் என பிரதி பொதுமுகாமையாளரும் ஊடக பேச்சாளருமான காமினி செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.