பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக மலேசியா துணை நிற்கும்: பிரதமர்

Date:

பலஸ்தீன மக்களின் போராட்டங்களுக்கு மலேசியா தொடர்ந்து துணை நிற்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனியர்களுக்கு எதிரான கொடுமை, அடக்குமுறை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை  பிரதமர் கடுமையாக விமர்சித்தார்.

இந்த அநீதியின் விளைவாக, நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பலியாகியுள்ளன என்று பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, காசா பகுதியில் தற்போதைய வன்முறைக்கான மூல காரணங்களை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பலஸ்தீனியர்களுக்குரிய இடங்களை நீண்டகால சட்டவிரோத ஆக்கிரமிப்பு, முற்றுகை, துன்பம், அல்-அக்ஸாவை இழிவுபடுத்துதல் என்று பலவிதங்களில் ஆக்கிரமிப்பாளராக இஸ்ரேல் செயலாற்றி வருவதை சொல்லி மாளாது.

இஸ்ரேல் தங்கள் அரசியலுக்காக பலஸ்தீனர்களை பலியாக்கி வருகின்றது என்று வெளியுறவு அமைச்சகம்  ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில், மேலும் உயிரிழப்புகள், துன்பங்கள்,  அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.மத்திய கிழக்கின் சமீபத்திய வன்முறைகள் குறித்து மலேசியா கவலைப்படுகிறது.

சர்வதேச அமைதி, பாதுகாப்பைப் பேணுவதற்கான அதன் சாசனம், கட்டாயமான பொறுப்பின்படி செயல்படுமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையை மலேசியா வலியுறுத்துகிறது என்று பிரதமர் கூறினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...