ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதம்: கல்வியமைச்சு பிரகடனம்

Date:

 ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகக் கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ளது.

‘நினைத்த இடத்திற்கு செல்லவும், -வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை எடுக்கவும்’ என்பதே இவ்வருட வாசிப்பு மாதத்திற்கான கருப்பொருளாகும்.

ஒக்டோபர் மாதத்தை வாசிப்பு மாதமாக கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ள போதிலும், ஒக்டோபர் 23 முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை பாடசாலை நூலக வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

அதனை 23 ஆம் திகதி பாடசாலை நூலக தினமாகவும், 24 ஆம் திகதி நூலகச் சூழல் சுத்தம் செய்யும் தினமாகவும், 25 ஆம் திகதி நூல்களைப் பாதுகாத்தல் தினமாகவும், 26 ஆம் திகதி நூல் சேகரிப்பு தினமாகவும், 27 ஆம் நாள் நூலகப் பயன்பாட்டு மாணவர்களை கௌரவிக்கும் தினமாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்பு மாதத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் 110 பக்கங்களைக் கொண்ட பாடசாலை நூலக மற்றும் கற்றல்வள நிலையங்களின் திருத்தப்பட்ட ஆலோசனைக் குறியீடொன்றை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...