இலங்கையர்கள் தொடர்பில் எதனையும் கூறமுடியாது: இஸ்ரேலுக்கான இலங்கைத்தூதுவர்

Date:

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலுக்கு மத்தியில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் கண்டறியும் வகையில் மேற்கு காசா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தூதுவர் தமது விஜயத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பு தரப்பினர் விடுத்த அறிவித்தலுக்கு அமைய தமது விஜயத்தை நிறுத்திவிட்டு திரும்ப நேரிட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

போர் சூழலுக்கு மத்தியில் இஸ்ரேலில் தங்கியிருந்த இலங்கையர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இலங்கையர்கள் தொடர்பில் அறிந்துகொள்ளும் வகையில் நேற்றைய தினம் ( 11) இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உள்ளிட்ட பிரதிநிதிகள் மேற்கு காசா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தூதுவர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.

இந்த பின்னணியில், காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் உரிய தகவல்களை வழங்க முடியாதுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...