கொழும்பில் பரவி வரும் கண்நோய்: கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தம் !

Date:

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பரவி வரும் கண்நோய் தொடர்பில், சுகாதாரத்துறை தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகின்றது.

கொழும்பு மேற்கு, மத்திய, வடக்கு மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மத்தியில் இந்த நோய் பரவி வருவதாக கொழும்பு சிரேஸ்ட சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த கண் நோய் தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கண்கள் சிவத்தல், தொடர்ந்தும் கண்ணீர் வெளியேறுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களிடத்தில், 5 நாட்களுக்கு மேலாக இவ்வாறான அறிகுறிகள் நீடிக்குமாயின், உடனடியாக அவர்களை வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கண்நோய் தொற்றை குறைப்பதற்காக அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல், கண்களைத் தொடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கொழும்பு – கொட்டாஞ்சேனையில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிகளவிலான சிறுவர்களிடையே கண்நோய் தொற்று ஏற்பட்டதை அடுத்து, அந்த பாடசாலையின் 6ஆம், 7ஆம், 8ஆம் தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...