தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு நியமனம்!

Date:

2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக 2518 மாணவர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நாட்டில் நிலவி வரும் நிதி நிலையற்ற தன்மை காரணமாக ஆரம்ப கட்டத்தில் 1000 மாணவர்களுக்கு மட்டுமே நியமனம் வழங்க திறைசேரி தீர்மானித்திருந்தது.

பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அரசிடம் விடுத்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசாங்க தாதியர் சங்கம் தலையிட்டு இது தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு கண்டது.

அரசாங்க தாதியர் சங்கம் சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியிடம் இது தொடர்பிலான விடையங்களை முன்வைத்ததன் விளைவாக, கடந்த 2018ஆம் ஆண்டில் தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு அனைவருக்கும் நியமனங்களை வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...