இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு-7 இல் அமைந்துள்ள தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்றது.
இதன்போது, “இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.