இந்திய – இலங்கை கப்பல் சேவை இன்று ஆரம்பம் l டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Date:

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கப்பல் சேவை இன்று (14) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி முதலாவது பயணிகள் கப்பல் இந்தியாவில் இருந்து இன்று (14) காலை இலங்கையை வந்தடைய உள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்னிந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் இந்த பயணிகள் படகுச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 50 பயணிகளுடன் இந்த கப்பல் இன்று காலை 11.30 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கப்பல் கூட்டுத்தாபனம் பயணிகள் படகு சேவையை இயக்குகிறது.

இந்தியாவில் இருந்து காலை பயணத்தை  ஆரம்பிக்கும்  இந்த பயணிகள் கப்பல், பிற்பகல் 02.30 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்பட உள்ளது.

இரு வழி பயணத்திற்கு 53,500 ரூபாவும், ஒருவழி பயணத்திற்கு 27,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...