இலங்கையில் தரமற்ற மருந்துகளால் HIV, ஹெபடைடிஸ் உண்டாகும் பேரபாயம்!

Date:

முறையான நடைமுறைகள் இன்றி சட்டவிரோதமாக இறக்குமதி செய்து அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளால் எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி(கல்லீரல் வீக்கம்), சி (வைரஸ்) போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8,000 நோய் எதிர்ப்பு சக்தி மருந்து குப்பிகள் இதுவரை நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட அனைத்து நோயாளர்களையும் உடனடியாக பரிசோதனை செய்ய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

1,000 – 10,000 ஆரோக்கியமான நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தி இந்த மருந்து தயாரிக்கப்படுகிறது என்றும், பிளாஸ்மாவின் பயன்பாட்டின் மூலம் உற்பத்தி செயல்முறை கடுமையான தரக் கட்டுப்பாட்டின் கீழ் செய்யப்படுகிறது, ஏனெனில் இது எச்ஐவி மற்றும் ஹெபடைடிஸ், பி மற்றும் சி போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

1990 ஆம் ஆண்டளவில், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளால் ஐரோப்பாவில் ஹெபடைடிஸ் சி பரவும் அபாயம் இருந்ததாக சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...