தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

குறித்த பரீட்சையில் 337,956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் காலை 9 மணிக்கு பரீட்சை மண்டபத்திற்கு வருகைத்தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் முலட்டியான ஆகிய கல்வி வலயங்களில் பிரதேச செயலகங்கள் ஊடாக மாணவர்கள் பரீட்சைக்குத் தொற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...