கொழும்பு வந்தடைந்த இந்தோனேசிய கடற்படைக் கப்பல்

Date:

இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான ‘KRI Bima Suci – 945’ எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர்.

‘KRI Bima Suci – 945’ எனும் பயிற்சி கப்பலானது 95 பயணிகளால் நிர்வகிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

குறித்த கப்பல் நாட்டில் நங்கூரமிட்டிருக்கும் காலப்பகுதியில் கப்பலின் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘KRI Bima Suci – 945’ கப்பல் தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று மாலை நாட்டைவிட்டு வெளியேறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...