இஸ்ரேல்-பலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உடன்கூட வேண்டும்; சபையில் சஜித் கோரிக்கை

Date:

இஸ்ரேல்-பலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபை அதன் பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை சஜித் பிரேமதாச, இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

உடனடியாக சர்வதேச சமூகம் போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் எனவும் கூறினார்.

காஸா பகுதியிலுள்ள Al-Ahli Arab மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டு தாக்குதலில் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

போரில் 1,400 இஸ்ரேலியர்கள் மற்றும் 3,000  பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் படுகொலை என்று அழைக்கலாம்.

இந்த போர் சூழ்நிலையை அமைதிப்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை கூட்டுமாறும், இவரகளின் தலையீட்டில் இந்த பயங்கரவாதத்தையும் அரச பயங்கரவாதத்தையும் உடனடியாக நிறுத்தக் கோருவதற்கான பிரேரணையை முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...